Thursday, 3 February 2011

மூதூர்க் கிழக்கு

மூதூரில் ஈச்சிலம்பத்தைப் பிரதேச செயலர் பிரிவு மூதூர் பிரதேச செயலர் பிரிவு மற்றும் சேருநுவர பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் படகு மூலமே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் அங்கிருந்து நேற்று பிற்பகல் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
கிராமங்களுக்கு இடையேயான தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
மூதூர்க் கிழக்கு பிரதேசத்தில் உள்ள சகல கிராமங்களும் வெள்ளத்தினால் தரைவழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைக் கட்டிடங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் துறைமுகத்துவாரம்,முட்டுச்சேனை,ஈச்சிலம்பற்று சந்தி,வட்டவான்,மாவடிச்சேனை,பூநகர் ஆகிய இடங்களுக்கு இடையேயும் படகு மூலமே மக்கள் இடம்பெயர்கின்றனர்

No comments:

Post a Comment