கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், பாதிப்புக்குள்ளான மக்கள் தங்கள் குடியிருப்புப் பிரதேசங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மக்களின் நாளாந்கத சுமுக வாழ்க்கை முற்றாக சீர்குலைந்துள்ளது. சகல வாழ்வாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளதால் ஜீவனோபாயத்திற்கு மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உறவினர்களது வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் திரட்டும் பணியிலும் நலன்புரி நிலையங்களின் நடவடிக்கைகளிலும் கிராம சேவகர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் குளங்கள் நிரம்பி வழிவதோடு, பல குளங்களினதும் நீர்த்தேங்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. நெல் வயல்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பிரதான வீதிகள் உட்பட அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. உள்ளக வீதிகளில் நீர் தேங்கி நிற்பதுடன் நீர் வழிந்தோடுவதற்காக வீதிகள் வெட்டப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையான சகல கரையோரப் பிரதேசங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தருகின்றன. அம்பாறையில் சேனநாயக சமுத்திரத்தின் நீர் மட்டம் 107 அடிக்கு மேல் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் கதவுகள் திறக்கப்பட்டதால் காரைதீவு, சம்மாந்துறை, ஒலுவில் ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அம்பாறை, கல்முனை போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
இச் சமுத்திரம் திறக்கப்பட்டதனால் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும் வெள்ள அனர்த்தத்திற்குள்ளானதாக பதிவாளர் எச்.ஏ.சத்தார் தெரிவித்தார். இங்கு பிரதான மின்மாற்றி வெள்ளத்தினால் அள்ளுண்டதுடன், விரிவுரையாளர் விடுதிகளும் பெரும் கிடங்குகளாகத் தோண்டப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால் இப்பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளன. காலநிலை சீராகும் வரை வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாடசாலைகள் அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்பே மீளத்திறக்கப்படுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று அதிகமான பாடசாலைகள் மாணவர்களது வரவின்மையினாலும் நீரில் மூழ்கியுள்ளதனாலும் நேரத்துடன் மூடப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் படகொன்றில்மீன்பிடிக்கச் சென்ற இருவர் படகு கவிழ்ந்ததனால் வெள்ளத்தில் அள்ளிச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டங்களில் பிரதான தொழில்துறைகளான விவசாயம், மீன்பிடிகளும் சகல வாழ்வாதார முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன், அதிக விலை உயர்வும் காணப்படுகின்றது. கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் விவசாயச் செய்கைகள் யாவும் மாறி மாறி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அழிவடைந்துள்ளன. சுமார் 2 மாதங்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததனால் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் மற்றும் பண்ணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் இம்மாவட்டங்களில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ள நீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பெறுமதியான வீட்டு உபகரணங்களும் தளபாடங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் பெருதல், மலசலகூடத் தேவை என்பவைகளை நிறைவேற்றுவதில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளையும் இம் மக்கள் எதிர்நோக்கி வருவதுடன், கடும் குளிரான காலநிலை தொடர்வதால் சிறுவர்களும் வயோதிபர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இச்சீரற்ற காலநிலை இடைக்கிடை நிலவுவதுடன், இது மே மாதம் வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 217.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தேங்கிநிற்கும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது
மக்களின் நாளாந்கத சுமுக வாழ்க்கை முற்றாக சீர்குலைந்துள்ளது. சகல வாழ்வாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளதால் ஜீவனோபாயத்திற்கு மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உறவினர்களது வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் திரட்டும் பணியிலும் நலன்புரி நிலையங்களின் நடவடிக்கைகளிலும் கிராம சேவகர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் குளங்கள் நிரம்பி வழிவதோடு, பல குளங்களினதும் நீர்த்தேங்கங்களும் திறந்துவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. நெல் வயல்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பிரதான வீதிகள் உட்பட அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. உள்ளக வீதிகளில் நீர் தேங்கி நிற்பதுடன் நீர் வழிந்தோடுவதற்காக வீதிகள் வெட்டப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையான சகல கரையோரப் பிரதேசங்களும் வெள்ளக் காடாகவே காட்சி தருகின்றன. அம்பாறையில் சேனநாயக சமுத்திரத்தின் நீர் மட்டம் 107 அடிக்கு மேல் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் கதவுகள் திறக்கப்பட்டதால் காரைதீவு, சம்மாந்துறை, ஒலுவில் ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அம்பாறை, கல்முனை போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
இச் சமுத்திரம் திறக்கப்பட்டதனால் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெரும் வெள்ள அனர்த்தத்திற்குள்ளானதாக பதிவாளர் எச்.ஏ.சத்தார் தெரிவித்தார். இங்கு பிரதான மின்மாற்றி வெள்ளத்தினால் அள்ளுண்டதுடன், விரிவுரையாளர் விடுதிகளும் பெரும் கிடங்குகளாகத் தோண்டப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால் இப்பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளன. காலநிலை சீராகும் வரை வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாடசாலைகள் அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்பே மீளத்திறக்கப்படுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று அதிகமான பாடசாலைகள் மாணவர்களது வரவின்மையினாலும் நீரில் மூழ்கியுள்ளதனாலும் நேரத்துடன் மூடப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் படகொன்றில்மீன்பிடிக்கச் சென்ற இருவர் படகு கவிழ்ந்ததனால் வெள்ளத்தில் அள்ளிச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டங்களில் பிரதான தொழில்துறைகளான விவசாயம், மீன்பிடிகளும் சகல வாழ்வாதார முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன், அதிக விலை உயர்வும் காணப்படுகின்றது. கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் விவசாயச் செய்கைகள் யாவும் மாறி மாறி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அழிவடைந்துள்ளன. சுமார் 2 மாதங்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததனால் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் மற்றும் பண்ணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் இம்மாவட்டங்களில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ள நீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பெறுமதியான வீட்டு உபகரணங்களும் தளபாடங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் பெருதல், மலசலகூடத் தேவை என்பவைகளை நிறைவேற்றுவதில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளையும் இம் மக்கள் எதிர்நோக்கி வருவதுடன், கடும் குளிரான காலநிலை தொடர்வதால் சிறுவர்களும் வயோதிபர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இச்சீரற்ற காலநிலை இடைக்கிடை நிலவுவதுடன், இது மே மாதம் வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 217.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தேங்கிநிற்கும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது
No comments:
Post a Comment