Thursday, 3 February 2011

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளது

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகள் மீண்டும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்துக்கான அனைத்துப்பிரதேசங்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது

கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் அடைமழை சில நாட்கள் ஓய்திருந்திருந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு சில நாட்களில் மீண்டும் கனமழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்துப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நீரின் அளவு மட்டம் உயர்ந்துவரும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக படுவான்கரைப்பகுதியின் அனைத்துப்பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கு செல்லும் அனைத்துப்பாதைகளும் வெள்ள நீர் நிரம்பியதால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.அப்பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் அவர்களுக்கான உணவுப்பொருட்களை இயந்திரப்படகுகள் மூலம் கொண்டுசெல்லும் பணிகளை படையினருடன் இணைந்து பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

படுவான்கரைக்குச்செலும் மண்டூர் –வெள்ளாவெளி வீதிபட்டிருப்புவீதி வவுனதீவுப்பாலம் போன்றனவற்றால் வெள்ள நீர் ஆறு அடிக்கும் மேல் பாய்ந்துசெல்கின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு –கொழும்பு பாதையில் பிள்ளையாரடி மற்றும் ஊறணி போன்றவற்றின் வீதிகளிலும் தன்னாமுனை வந்தாறுமூலைசந்திவெளி கிராண் போன்ற பிரதேசங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு கல்முனை காரைதீவு வீரமுனை மல்வத்தை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று தம்பிலுவில் திருக்கோவில் போன்ற பகுதிகளிலும் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்றுவேளையும் சமைத்த உணவு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகளை அழைத்து தற்போதை நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள நிலைமையினை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள நிலைமையினை எதிர்கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் சமைத்த உணவு மற்றும் குழந்தைகளுக்குரிய பொருட்கள்துபாய்கள்போர்வைகள்குடி நீர்கள் என்பனவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்தார்

No comments:

Post a Comment